Wednesday, December 18, 2013
இந்திய மீனவர்கள் கைது .இலங்கை அட்டுழியம்
<அவர் நகர தந்தை. அவரிடம் ஒரே செய்தியே வெவ்வேறு
முறையில் கூறும்போது அவரின் மனநிலையை காணலாம்
**************************************************************
அய்யா ,
நேற்று இரவு ,பக்கத்து தெரு பையனை,
பக்கத்து ஊர்காரன் அடித்து விட்டானாம்
விடப்பா இவன் தண்ணி அடித்து விட்டு ஏதாவது
தகராறு பண்ணியிருப்பான் .அவன் இவனை போட்டு
அடித்து இருப்பார்கள் -என்கிறார்
*************************************************************
இதே செய்தியை வேறு மாதிரி கூறினால் ,
அய்யா ,
நேற்று இரவு
நம்ம ஊரு பையனை வெளி ஊர்க்காரன்
அடித்துவிட்டானாம் .
--அதெப்படி ,அவன் அடிக்கலாம்
இவன் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா கூட
போலீஸ் கிட்ட அல்லது பெரியவங்க நம்ம கிட்ட
சொல்லியிருக்கலாம் இல்லயா . இவனுங்க எப்படி
கைய நீட்டுலாம் ?- என்கிறார்
**************************************************************
நமது பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் ,
தமிழக மீனவர்கள் -இலங்கை கைது எனக்கூறி
பக்கத்து தெரு மனப்பான்மையை
மத்திய அரசுக்கு உருவாக்கி வருகிறது.
ஆனால்
இந்திய மீனவர்கள் கைது .இலங்கை அட்டுழியம்
என எழுதி
நம்ம ஊரு மனப்பான்மையை
மத்திய அரசுக்கு கொண்டு வரவேண்டும்
மீடியாக்கள் மனது வெய்த்தால்
இது சாத்தியமே
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment