Wednesday, December 18, 2013

இந்திய மீனவர்கள் கைது .இலங்கை அட்டுழியம்

<அவர் நகர தந்தை. அவரிடம் ஒரே செய்தியே வெவ்வேறு முறையில் கூறும்போது அவரின் மனநிலையை காணலாம் ************************************************************** அய்யா , நேற்று இரவு ,பக்கத்து தெரு பையனை, பக்கத்து ஊர்காரன் அடித்து விட்டானாம் விடப்பா இவன் தண்ணி அடித்து விட்டு ஏதாவது தகராறு பண்ணியிருப்பான் .அவன் இவனை போட்டு அடித்து இருப்பார்கள் -என்கிறார் ************************************************************* இதே செய்தியை வேறு மாதிரி கூறினால் , அய்யா , நேற்று இரவு நம்ம ஊரு பையனை வெளி ஊர்க்காரன் அடித்துவிட்டானாம் . --அதெப்படி ,அவன் அடிக்கலாம் இவன் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா கூட போலீஸ் கிட்ட அல்லது பெரியவங்க நம்ம கிட்ட சொல்லியிருக்கலாம் இல்லயா . இவனுங்க எப்படி கைய நீட்டுலாம் ?- என்கிறார் ************************************************************** நமது பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் , தமிழக மீனவர்கள் -இலங்கை கைது எனக்கூறி பக்கத்து தெரு மனப்பான்மையை மத்திய அரசுக்கு உருவாக்கி வருகிறது. ஆனால் இந்திய மீனவர்கள் கைது .இலங்கை அட்டுழியம் என எழுதி நம்ம ஊரு மனப்பான்மையை மத்திய அரசுக்கு கொண்டு வரவேண்டும் மீடியாக்கள் மனது வெய்த்தால் இது சாத்தியமே